June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

1 min read

Guiding program for government exams at Thoranamalai

1.4.2024
தென்காசி மாவட்டம் தென்காசி – கடையம் செல்லும் பாதையில் உள்ள தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமப்புற மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி-கடையம் சாலை அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில், ஆன்மீகத்தோடு பல்வேறு அறப்பணிகள், கல்வியறிவு மற்றும் உடல்திறனை மேம்படுத்தும் விதமாகவும், நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய கலையான சிலம்பு , யோகாசனம் போன்ற கலைகளை மீட்டெடுப்பதற்காகவும், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிநது.
இதன் தொடர்ச்சியாக துளிர் ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குரூப்-1, குரூப்-2, காவல் மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் கிராமப்புற மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக துளிர் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த இயக்குனர் மாரிமுத்து, துணை இயக்குனர் முரளி அண்ணாதுரை, இணை இயக்குனர் காளிதாஸ்,ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பக ராமன் ஆதிநாராயணன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.