June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே நடந்த கொள்ளையில் 24 மணி நேரத்தில் 4 பேர் கைது- ஐஜி பாராட்டு

1 min read

4 people arrested in 24 hours in robbery near Sankarankoil- IG praises

6.4.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே
பனவடலிசத்திரம் பகுதியில்
வீட்டின் கதவை உடைத்து 58 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய 4 குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த பனவடலிசத்திரம் போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பிர்காவில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இசக்கிமுத்து என்பவரின் மகள் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் ஆகியோர்
பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். கஸ்தூரி மற்றும் அவரது கணவர் தங்கத்துரை ஆகியோர் கடந்த 02.04.2024 அன்று ஆராய்ச்சி பட்டியிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த 58 பவுன் தங்க நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகளை வீட்டின் கதவை உடைத்து யாரோ திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கஸ்தூரி பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் கஸ்தூரி அளித்த புகாரின் அடிப்படையில் பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் தலைமையில் சிறப்பு தனி படையும், சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தென்காசி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கார்த்திக்(வயது 28), மாடசாமி என்பவரின் மகன் குமார் (எ) கொம்பன் குமார்(வயது 38), சுத்தமல்லி கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 50) மற்றும் தேவர்குளம் செல்வராஜ் என்பவரின் மனைவி சரோஜா (வயது 37) ஆகியோர் என தெரிய வந்தது.உடனடியாக 4 பேர்களையும் போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 4 பேர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 40 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த பனவடலிசத்திரம் காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.