குற்றாலம் கோவிலில் சித்திரை விசு திருவிழாதொடங்கியது
1 min read
Chitrai Vishu Festival at Courtalam Temple started
6.4.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற திருக்குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசுத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விசுத் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
சித்திரை விசுத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையில் கொடி பட்டம் வீதி உலா எடுத்துவரப்பட்டது. கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல இசை ஒலிக்க வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. சிவ பூத கனவாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
சித்திரை விசு திருவிழா திருக்கொடியை பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர், ஓதுவார் சங்கர நாராயணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இந்த விழாவுக்கு திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையா பாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், பா.துரை(எ)இராமையா,
தென்காசி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலருமான டி.ஆர்.கிருஷ்ணராஜா, குற்றாலம் குட்டி, இரா.கருணாநிதி (எ) மாரியப்பன், சுரேஷ், சர்வோதயா கண்ணன், வேல்ராஜ் ,திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 8 ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 9 ம் தேதி காலையில் 8:20 மணிக்கு மேல் 4 தேர்தல் ஓடும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
11 ம் தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது 12-ம் தேதி காலை 10 மணிக்கு சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவர் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 14
ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று காலை 10 20 மணிக்கு மேல் சித்திரை விசு தீர்த்தவாதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.