தென்காசியில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா
1 min read
Award Ceremony for Blood Donors in Tenkasi
8.4.2024
தென்காசியில் தமிழ்நாடு சிரிப்பு யோகா சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் சமூக அமைப்புகள் மூலம் குருதி கொடையாளர் களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
தமிழ்நாடு சிரிப்பு யோகா சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சாரல், ஜேசிஐ தென்காசி கிளை, வேலு டிரஸ்ட், தி 1234 அறக்கட்டளை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தென்காசி இரத்ததான கூட்டமைப்பு சார்பில் குருதி கொடையாளர்களுக்கு சிரிப்பு விருந்துடன் விருது வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு அகில உலக சிரிப்பு யோகா தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி கராத்தே ஐ கண்ணன் தலைமை வகித்தார், ஜேசிஐ தென்காசி கிளை இயக்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனத் தலைவர் என்.மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், சாந்தி நிகேதன் நர்சிங் ஹோம் மருத்துவர் கிருஷ்ணகுமார், செங்கை பி பி எம் சிட்பண்ட் நிர்வாக இயக்குனர் முருகேசன் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர், வேலு டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முருகன், முன்னாள் மண்டல தலைவர் கிறிஸ்டோபர், இந்தியன் ரெட் கிராஸ் சுப்பிரமணியன், 1234 தென்காசி தொகுதி மேதை திருஇலஞ்சிகுமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பகுதியில் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் யாருக்கு உதவி செய்கிறோம் என்று கூட தெரியாமல் தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்து தன்னுடைய குருதியினை தானமாக வழங்கி வரும் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் இலஞ்சி குத்தாலபெருமாள் உள்ளிட்ட தென்காசி இரத்ததான கூட்டமைப்பு குருதி கொடையாளர்கள் சுமார் 300 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம், ரத்தம் உற்பத்தி செய்யக்கூடிய பீட்ரூட் ஆகியவை வழங்கப்பட்டன முடிவில் தென்காசி இரத்ததான கூட்டமைப்பு செயலாளர் கோபி அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக அகில உலக சிரிப்பு யோகா தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி கராத்தே கண்ணன் சிரிப்பு குறித்த விளக்கமும் யோகாவும் செய்து காட்டினார்
படம் விளக்கம் ; அதிக முறை குருதி தானம் செய்தமைக்கு தென்காசி மாவட்ட செய்தியாளர் குத்தாலப் பெருமாள் விருது பெறும்போது எடுத்த படம்