June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

1 min read

Court refuses to grant interim bail to Kejriwal

5.5.2024
இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால், தொடர்ந்த மனுவை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிவடைந்ததை அடுத்து, கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார். இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், இடைக்கால ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
தள்ளுபடி
இந்த மனு இன்று (ஜூன் 05) விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நான் சிறையில் இருந்து வீடு திரும்புவேன் என கெஜ்ரிவால் மூச்சுக்கு 300 தடவை கூறி வந்தார். ஆனால் தே.ஜ., கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்று, கெஜ்ரிவாலின் கனவை பொய்யாக்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.