மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பு
1 min read
Modi takes office as Prime Minister for the 3rd term
9.5.2024
நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று(9-5-2024) மாலை 7.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து இரண்டாவது நபராக ராஜ்நாத்சிங் பதவியேற்றார். இவர்களை தொடர்ந்து அமித்ஷா ,நிதின்கட்கரி,ஜெ.பி.நட்டா,சிவராஜ்சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் , மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஜித்தன்ராம் மாஞ்சி ,லாலன்சிங் ,சர்பானந்த சோனேவால்,வீரேந்திர குமார்,ராம் மோகன் நாயுடு ,பிரகலாத் ஜோஷி,ஜூவல் ஓரம்,கிரிராஜ்சிங், அஸ்வினி வைஷ்ணவ்,ஜோதிர் ஆதித்ய சிந்தியா,கஜேந்திர சிங் செகாவத், அன்னபூர்ணா தேவி, கிரண்ரிஜிஜூ, எல்.முருகன் உள்பட பலர் மந்தி்ரிகளாக பதவியேற்றனர்.
பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த விழாவில் பங்கேற்றார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முரளிமனோகர் ஜோஷி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி , கவுதம் அதானி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே, கங்கனா ரனாவத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், லோக்சபா முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா அமமுக பொதுசெயலாளர் தினகரன், முன்னாள் மத்திய மந்திரி வி.கே.சிங் மற்றும் பல்வேறு நாட்டு துாதர்கள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பிபதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், அக்சய்குமார், தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மற்றும் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் ஆரிப்கான் பங்கேற்றனர்.. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.