குவைத் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி
1 min read
5 people from Tamil Nadu died in Kuwait fire accident
12/5/2024
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் ரருவர் ராமு. விபத்தில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பழைய செக் போஸ்ட் பகுதியில் வசிக்கும் சத்திரக்குடி அருகே தென்னவனூரைச் சேர்ந்த ராமு (60) உயிரிழந்தார். இது குறித்த தகவல் படி, ராமுவின் மனைவி குருவம்மாள், தனது கணவர் உடலை மீட்டுத்தர வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகதில் மனு அளித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.