கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை- ரூ.1.59 லட்சம் பறிமுதல்
1 min read
Anti-Bribery Department raids at the office of the Deputy Registrar – Rs. 1.59 lakh seized
13.5.2024
தென்காசி மாவட்டம், கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கட்டாய வசூல் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் வந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ 1.59 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பைசூல் ராணி (பொ) சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த அலுவலகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 முதல் 20 ஆவணங்களும், முகூர்த்த நாட்களில் 25 முதல் 50 ஆவணங்கள் வரையும் பதிவு செய்யப் படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங் களுக்கு பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக, சொத்தின் மதிப்பிற்கேற்ப கட்டாய பணம் வசூல் செய்வதாகவும் . இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளது.
அதனைத் தொடந்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர்
பால்சுதர், உதவி ஆய்வாளர் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, பிரபு, வேணு கோபால், மற்றும் காவலர்கள் கணேஷ், பிரவீனா உள்ளிட்டக் குழுவினர் நேற்று மாலை கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில்
திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சார்பதிவாளர் அலுவல கத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.1.59 லட்சம் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற் றினர். இதுகுறித்து சார்ப திவாளர் (பொ) பைசூல் ராணி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.