June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் வாகன திருட்டு-2 பேருக்கு ஓராண்டு சிறை

1 min read

One year imprisonment for 2 people in Buliangudi car theft case

13.5.2024
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த 2023 ம் ஆண்டு வாகனத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தங்க ரத்தினம் என்பவரின் மகன் ராஜேஷ்( வயது 37) மற்றும் சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாதுரை என்பவரின் மகன் திலிப் ராஜா (வயது 35) ஆகியோரை அப்போதைய காவல் ஆய்வாளர் கோவிந்தன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இவ்வழக்கின் விசாரணை சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி காளீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 01 ஆண்டு தண்டனை மற்றும் 1000 ரூபாய் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த புளியங்குடி காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.