June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

1 min read

POCSO convict arrested under gangster act in Tenkasi

13.5.2024
தென்காசியில் போக்சோ வழக்கில் சிக்கிய குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான தென்காசி பாறையடி இரண்டாவது தெருவை சேர்ந்த முகமது யூசுப் என்பவரின் மகனான அப்துல் ஜப்பார் (வயது 35) என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் அப்துல் ஜப்பார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.