உடனடியாக ஆஸ்பத்திரிக்கு போகாததே பலி அதிகரிப்புக்கு காரணம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
1 min read
Not going to the hospital immediately is the reason for the increase in casualties – Minister M. Subramanian
21.6.2024
விஷ சாராயம் அருந்திய 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 168 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற தயங்கிய 55 பேருக்கு மருத்துவமனை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷ சாராயம் அருந்தியவர்கள் சிலர் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதே இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம். விஷ சாராயம் அருந்தியதில் மூன்று பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 600 படுக்கைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.