தென்காசி மாவட்டத்தில் மது, கஞ்சா, குட்கா, லாட்டரி, விற்ற 84 பேர் கைது
1 min read
84 people arrested for selling liquor, ganja, gutka, lottery in Tenkasi district
25/5/2024
தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த 84 நபர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டிபி சுரேஷ் குமார் உத்தரவுபடி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.டி.பி
சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 63 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 496 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 18,940 மதிப்பிலான 468 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை விற்பனை செய்த 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3570 மதிப்பிலான சுமார் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டிபி சுரேஷ்குமார் உத்தரவுபடி கைது செய்யப்பட்ட 84 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 84 நபர்களை ஒரே நாளில் கைது செய்து சிறையில் அடைத்த மாவட்ட கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமாருக்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.