10, பிளஸ் 2 தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா
1 min read
Appreciation ceremony for meritorious students in 10th, Plus 2 examination
26.5.2024
தென்காசி சுற்று வட்டார பள்ளிகளில் சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு, அரசு உதவி பெறும், தனியார், மற்றும் சிபிஎஸ்இ உட்பட அனைத்து வகையிலும் 70 பள்ளிகளைச் சார்ந்த 450 மாணவர்களுக்கு பாராட்டு விழா தென்காசி விடிஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விடிஎஸ்ஆர் சில்க்ஸ், மெடி அகடமி , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவிற்கு விடிஎஸ்ஆர் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் ரகுமான் கான் தலைமை தாங்கினார். விடிஎஸ்ஆர் முகம்மது இஸ்மாயில் மற்றும் ரெடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் வில்சன் அருளானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ
பராசக்தி மகளிர் கல்லூரி பணி நிறைவு பேராசிரியர் முனைவர் சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
மெடி அகடமி நிர்வாக இயக்குநர் முனைவர் சுரேஷ் ஜான் கென்னடி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்டக் கல்வி அலுவலர் தேவிகாராணி , உதவி திட்ட அலுவலர் சீவல முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மதன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும், தென்காசி டாப்பர்ஸ் 24 என்ற விருதும் , பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கி பாராட்டினார்கள்.
ஆர்.சி. பள்ளிகளின் தாளாளர் அருட் சகோதரர் போஸ்கோ குணசீலன், பணி நிறைவு மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் சுடலை , வேதம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், நடுப்பேட்டை பள்ளி இமாம் அமானுல்லா நடுப்பேட்டை பள்ளி வாசல் செயலாளர் முகம்மது மீரா உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலருமான சுரேஷ் குமார் ஒருங்கிணைத்தார். நான் முதல்வன் திட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அபுநவாஸ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு மாணவர்கள் மேலும் சாதனை புரிய தூண்டு கோலாக அமைந்தது. ஏற்பாடுகளை ஈசாக் குழுவினர் செய்திருந்தனர். புனித சவேரியார் கல்வியியல் கல்லூரி நூலகர் ராஜா நன்றி கூறினார் நாட்டுப் பண் பாட விழா இனிதே நிறைவேறியது.