சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற 4 பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல்
1 min read
Election of 4 Speaker of Parliament held in independent India
26.5.2024
நாடு விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவில் 3 முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952, 1967 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இப்போது 4 வது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது.
1952-ம் ஆண்டு முதலாவது லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு மவ்லாங்கரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான இடதுசாரித் தலைவர் ஏகே கோபாலன், சந்தர் சந்தானத்தை முன்மொழிந்தார். இதனால் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மவ்லாங்கர் 394 வாக்குகளையும் சங்கர் சந்தானம் 55 வாக்குகளையும் பெற்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் சங்கர் சந்தானம் பெயர், லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வாக்காளர் பட்டியலிலே இல்லாமல் இருந்ததுதான்.
1967-ம் ஆண்டும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியும் தென்னேதி விஸ்வநாதனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி 278 வாக்குகளும் அவருக்கு எதிராக 207 வாக்குகளும் பெறப்பட்டன. இதனையடுத்து நீலம் சஞ்சீவ ரெட்டி சபாநாயகரானார்.
1976-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் வென்றன. அப்போதும் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பலிராம் பகத், ஜகன்னாத் ராவ் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பலிராம் பகத், 344 வாக்குகளையும் ஜகன்னாத் ராவ் 58 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து பலி ராம் பகத் சபாநாயகரானார்.
1989-ல் இருந்து கூட்டணி ஆட்சிகளின் சகாப்தம் இந்தியாவில் வலிமையானதால் ‘சபாநாயகர்’ பதவிக்கு போட்டி இல்லாமல் போனது.
1989-ம் ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சி அமைத்த போது ஜனதா தளத்தின் ரபி ராய் சபாநாயகராக்கப்பட்டார். 1991-ல் காங்கிரஸ் ஆட்சியில் சிவராஜ் பட்டீல் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
1998-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி சபாநாயகரானார்.
1999-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னரும் பாலயோகி சபாநாயகராக தேர்வானார். பாலயோகி மரணம் அடைந்த பின்னர் சிவசேனாவின் மனோகர் ஜோஷி, சபாநாயகர் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்த போது இடதுசாரிகளின் சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகரானார்.
2009-ம் ஆண்டு மீரா குமார் சபாநாயகராக்கப்பட்டார். 2014-ல் பாஜக ஆட்சி அமைத்த போது சுமித்ரா மகாஜனும் 2019-ல் பாஜக மீண்டும் வென்ற போது ஓம் பிர்லாவும் சபாநாயகர் பதவி வகித்தனர்.
இப்போது சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடந்துள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.