June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

மாற்றுத் திறனாளிகள் நலன்காக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது – தென்காசி ஆட்சியர் தகவல்

1 min read

Award to Charitable Organizations for the Welfare of the Handicapped – Tenkasi Collector Information

28.5.2024
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆகஸ்டு 2024 சுதந்திர தின விழா அன்று விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளி களுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு விருதுகள் 15 ஆகஸ்டு 2024 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளி களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம். மற்றும் சான்றிதழும் மாற்றுத்திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம். மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5. லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் 02.07.2024 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப் பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.