June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் மரணத்தின் விளிம்பில் இருந்த பெண் மீட்பு

1 min read

Rescue of woman who was on the brink of death in Red Fort

28.5.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் சாலை ஓரம் ஆதரவின்றி மரணத்தின் விளிம்பில் இருந்த பெண்ணை மீட்டு உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் அமைப்புக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டை அருகே சாலையோரம் ஆதரவு இல்லாமல் கால்கள் முழுக்க புண்களில் புழுக்கள் வைத்து நிலைமையில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மகமாயி என்ற பெண் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டே இருந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த பசியில்லா தமிழகம் குழுவினர் செங்கோட்டை காவல் துறை ஆய்வாளர் தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடமும் உரிய அனுமதி பெற்று அந்த பெண்ணை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை செய்து பசியில்லா தமிழகம் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள்.

கால்கள் முழுவதும் புழுக்கள் நிறைந்த புண்கள் இருப்பதால் அனைத்தையும் முதலுதவி சிகிச்சை செய்து தினமும் செவிலியர்கள் உதவியுடன் கட்டுப்போட்டு வருகிறார்கள். புண்கள் ஆறுவதற்கு சுமார் 3 முதல் 6 மாத காலங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நடக்க முடியாமல் இருப்பதால்,
தினமும் மலம் கழிப்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளதால் டையபர் மூலமாகவே பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களின் உதவியால் தினமும் மலம், சிறுநீர் கழித்து வருகிறார்கள்.

மகமாயி பாட்டிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளதாகவும், ஒரு மகன் பெயர் ராம்குமார் என்றும் தென்காசி கூலக்கடை பஜாரில் கடை வைத்திருப்பதாகவும் கூறுகிறார், மற்றொரு மகன் பெயர் கணேஷ் என்றும் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் பணிபுரிவதாகவும், மகள் பெயர் செல்வி என்றும் கூறுகிறார்.

பசியில்லா தமிழகம் மூலமாக அவர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்தும் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் அனாதையாக தர்மம் எடுத்து சாலையில் வாழ்ந்து வருகிறார். இந்த மகமாயிப் பாட்டியை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக பசியில்லா தமிழகம் (8883340888) குழுவினரை தொடர்பு கொள்ளுமாறு பசி இலலா தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் முகமது அலி ஜின்னா தெரிவித்துள்ளார்.

சாதி மதம் பார்க்காமல் ஆதரவற்று சாலையில் இருந்த மகமாயி பாட்டியை சிகிச்சை கொடுத்து இன்று நல்ல நிலைமையில் வைத்திருக்கும் பசியில்லா தமிழகம் குழுவினரை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.