சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 4 பேர் பலி
1 min read
Explosion in firecracker factory near Chatur – 4 killed
29.5.3035
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வெடி விபத்தில் 3 அறைகள் சேதமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.