June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு குண்டாஸ்

1 min read

Kundas for 4 more in Tenkasi district

29.5.2024
தென்காசி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கின் இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஊத்துமலை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர் உட்பட ஆறு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கல் வலசையில் கடந்த 06.06.2024 அன்று நடைபெற்ற கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான குத்துக்கல் வலசை பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபால கிருஷ்ணன் (வயது 27), வேதம் புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த லியாக்கத் அலி என்பவரின் மகன் அஜ்மல் அலி (வயது 24), குத்துக்கல்வலசை அழகு முத்து நகர் 1வது தெருவை சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் குமார் (வயது 28) மற்றும் நேருஜி தெருவை சேர்ந்த ராமசுப்பையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (வயது 23) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட தென்காசி ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.