June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒன் டூ ஒன் பேருந்துகள்ஆலங்குளம், பாவூர்சத்திரத்தில் நின்று செல்ல கோரிக்கை

1 min read

Request for one to one buses stopping at Alankulam, Bhavoorchatra

29.5.2024
தென்காசி – திருநெல்வேலி இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் ஆலங்குளம், பாவூர்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், தென்காசி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாது:-

திருநெல்வேலியில் இருந்து தென்காசிக்கும், தென்காசியில் இருந்து நெல்லைக்கும் தினந்தோறும் 15 க்கும் மேற்பட்ட ஒன் டூ ஒன் எனப்படும் இடைநில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் இவ்வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரத்தில் நிற்பதில்லை .

ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளானது 100க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு மைய பகுதியாக விளங்கிறது. இவ்வூர்களில் இருந்து தான் அதிகமானோர் நெல்லை, தென்காசிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், மருத்துவமனை செல்வோர் என சென்று வருகின்றனர்.

இவர்களுக்கு போதிய பேருந்துகள் வசதி இன்றி உள்ளன.
எனவே தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரத்தில் இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.