பீஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் இடிந்தது
1 min read
After Bihar, the bridge collapsed in Jharkhand
30.5.2024
பீஹாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று (ஜூன் 30) திடீரென இடிந்து விழுந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
பீஹாரில் இடிந்த பாலம் விபரங்கள் பின்வருமாறு:
இதற்கு முன்னர் அடுத்தடுத்து பீஹாரில் 5 இடங்களில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.