July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் – ஆட்சியர் ஆய்வு

1 min read

Search for you in your town project in Red Fort – Collector survey

19.7.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பகுதிகளில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி. சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட சீவநல்லூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையினையும், பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத்திட்டம் குறித்தும் பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார்.

மேலும், செங்கோட்டை வட்டம் இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், காவல் நிலையத்தினையும், காவலர் குடியிருப்பு பகுதிகளையும், இலத்தூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியம் 2023 2024 ஆம் ஆண்டில் ரூ.126.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தினையும், கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், கிராம நிர்வாக அலுவலகத்தினையும், ஊராட்சி மைய கட்டடத்தினையும், பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு மேற்கொண்டும். பெரியபிள்ளை வலசை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்புக் கிடங்கில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி.பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பார்வையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை கேட்டறிந்தும், செங்கோட்டை பேருந்து நிலையத்தில் ரூ.288 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக பொதுக்கழிப்பறை யினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வளாக கட்டடத்தினையும். தொடர்ந்து இன்று முழுவதும் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் (பொ) சுமா செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், ராதாதிருமலை, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், கருப்பசாமி இலத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தமிழ்ச்செல்வி, செயற்பொறியாளர் ஏழிசைச் செல்வி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், செங்கோட்டை நகர் மன்ற தலைவர் இராமலட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர்
எஸ்.எம்.ரஹீம், நகராட்சி ஆணையாளர் சுமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.