நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருது வழங்கும் விழா
1 min read
Indo-Timur Special Award Ceremony at Nellai–Deputy Prime Minister Moore participates
23.7.2024
திருநெல்வேலியில் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விருது நிகழ்ச்சியில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ கலந்து கொண்டு பல்வேறு துறை, பணி, கலை, சாதனை, சிறப்புமிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கினார். நூறு பேர் கௌரவிக்கப்பட்டனர். நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்ரீராம் கிராண்ட் இன் ஹோட்டலில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பீஸ் பல்கலைக்கழக இந்திய ஆலோசகர் ஐசக் பாஸ்கர் தலைமை தாங்கினார். காமன்வெல்த் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர். ஜெயலால், முன்னாள் துணைவேந்தர் டாக்டர். ஆபிரகாம் முன்னிலை வகித்தனர்.
தைமூர் நாட்டு துணை பிரதமரின் மனைவி கேண்டிடா சீமன்ஸ் வியரியா நமது பாரம்பரியப்படி குத்து விளக்கேற்றினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துவக்க உரையை தைமூர் நாட்டு பீஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய இயக்குனர் டாக்டர். ஐசலின் பாஸ்கர் ஆற்றினார். விழா சிறப்புரையை தைமூர் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ ஆங்கிலத்தில் ஆற்றினார். அதன் தமிழாக்கத்தை சுருக்கமாக டாக்டர். ஐசக் பாஸ்கர் பேசினார்.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களை “உன்பாஸ்” பல்கலைக்கழக இந்திய இயக்குனர் டாக்டர். ராஜா தங்கப்பன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். துணை பிரதமர் மனைவிக்கு சாந்தி திருமாறன் பொன்னாடை அணிவித்தார். தைமூர் துணை பிரதமருக்கும் அவரது துணைவியாருக்கும் டாக்டர். ஐசலின் பாஸ்கர் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
தைமூர் துணை பிரதமர் பேசும்போது மருத்துவம் படிக்க தமிழகத்தில் சிரமப்படும் மாணவ மாணிவயர் தைமூர் நாட்டிற்கு தாராளமாக வரலாம். அங்கு தேவையான வசதிகள் உள்ளன. தைமூர் அமைதியான, அழகான, வேற்றுமைள் இல்லாத நாடு என பேசினார். நமது மருத்துவ மாணவர்கள் வருகைக்கு பச்சைக்கொடி அசைத்து அழைப்பு விடுத்தார்.
திமோர் துணை பிரதமரின் இந்த அழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது. இனி தைமூர் நாட்டிற்கு பெற்றோர் தமது பிள்ளைகளை பெருவாரியாக அனுப்புவர் என பேசப்பட்டது. நிறைவாக முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன் நன்றியுரை ஆற்றினார்.
பள்ளி முதல்வர்கள், மருத்துவர்கள், காந்தியவாதிகள், சர்வ கலைஞர்கள், சமூகசேவகர்கள், விஞ்ஞானிகள், காவல்துறை அதிகாரிகள், சூழல் ஆர்வலர்கள் “இண்டோ – தைமூர்” சிறப்பு விருது
பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மேலப்பாவூர் மாரியப்பனின் மங்கள இசை இடம் பெற்றது.
தமிழரின் வீரக்கலையான சிலம்பக் கலைஞர்கள் ஹரிஹரன் தலைமையில் சிலம்பமாடி துணை பிரதமரை வரவேற்றனர். இறுதியில் பத்திரிக்கையாளர் களை துணை பிரதமர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக பாளை இக்னேஷியஸ் பள்ளி மாணவியர் “போதை இல்லா பாதையில் நெல்லை” என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதனை திமோர் துணை பிரதமர் துவக்கி வைத்தார். துணை பிரதமர் பாதுகாப்பு படை அதிகாரிகள் திமோரிலிருந்து வந்திருந்தனர். திருநெல்வேலி கமிஷனர் தலைமையில் போல்ட் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஐசக் பாஸ்கர், ஆபிரகாம், ஐசலின் பாஸ்கர், டாக்டர் ஏகலைவன் மற்றும் வெங்காடம் பட்டி பூ.திருமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.