கடையம் திருவள்ளுவர் கழகத்தில் “சித்தர்கள் காட்டும் செம்மை நெறி” சொற்பொழிவு
1 min read
A lecture on “Politeness shown by Siddhars” at Kadayam Thiruvalluvar Kazhagam
26.7.2024
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர கூட்டம் கடையம் கே.எஸ்.எஸ். சிற்றரங்கத்தில் நடந்தது. கடையம் திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். திருவள்ளுவர் கழக செயலாளர் கே.எஸ்.கல்யாணி சிவகாமி நாதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
குறள் சிந்தனை பற்றி ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி க.சங்கரநாராயணன் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக அபுதாபி தமிழ்கடல் கு.பாஸ்கர் கலந்து கொண்டு “சித்தர்கள் காட்டும் செம்மை நெறி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் திருமூலர், சிவவாக்கியார் பற்றியும் அவர்கள் பாடல் மூலம் சொன்ன கருத்துக்களை சுவைபட கூறினார். குறி்ப்பாக மூச்சு பயிற்சி பற்றியும் அதன்மூலம் பிறக்கும் குழந்தையின் தன்மை பற்றியும் எடுத்துக்கூறியது அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக ஆசிரியர் வேலு வரவேற்றார். திருவள்ளுவர் கழக நிர்வாகி சோமு நன்றி கூறினார்.