தென்காசியில் மாற்றுத்திறனாளி களுக்கு வங்கிகடன் மேளா- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Bank Credit Mela for Disabled Persons in Tenkasi – Participation of District Collector
26/7/2024
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிகடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இம்முகாமில், 8 மாற்றுத்திறனாளி களுக்கு தலா 1.95,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் என மொத்தம் ரூ.7.60,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். வழங்கினார்.
இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், முன்னோடி வங்கி அலுவலர் இசக்கிமுத்து, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அரசு வங்கி ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.