June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது- இந்தியா கூட்டணி முதல் மந்திரிகள் புறக்கணிப்பு

1 min read

Niti Aayog meeting begins- India alliance first ministers boycott

28.7.2024
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் ஆலோசிக்கப்படுகிறது. 2047- க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி, மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.