அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு
1 min read
Opposition MPs support Ranil Wickremesinghe in the presidential election
1.8.2024
இலங்கையில் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்னும் சிலர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் கோஷ்டி மோதல் நிறைந்த ஸ்ரீ லங்கா விடுதலை கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை அதிபர் விக்ரமசிங்கேவை எஸ்.எல்.எஃப்.பி. மத்தியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார். அப்போது தங்களுடைய அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தனர். இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் கோஷ்டி மோதல் நிறைந்த ஸ்ரீ லங்கா விடுதலை கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை அதிபர் விக்ரமசிங்கேவை எஸ்.எல்.எஃப்.பி. மத்தியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார். அப்போது தங்களுடைய அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தனர். இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.