தென்காசியில் இலவச சைக்கிள், கனவு இல்லம் கட்ட பணி ஆணை-அமைச்சர் வழங்கினார்
1 min read
The minister gave the order to build a dream house and a free bicycle in Tenkasi
2.8.2024
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதி வண்டிகளையும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதி வண்டிகளையும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, உதவித் திட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு) கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்(பொ) திருமதி. தேவிகாராணி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கண்ணன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன். தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர். நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ,
மாணவியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.