சேந்தமரம் அருகே கோவில் திருவிழாவில் தீ விபத்து: 10 பைக்குகள் – 7 ஆடு தீயில் கருகியது
1 min read
Fire at temple festival near Senthamaram: 10 bikes – 7 goats burnt
4/8/2024
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பைக்குகள் ஏழு ஆட்டுக்குட்டிகள் 100 கற்கும் மேற்ப்பட்டகுடில்கள், பந்தல் உட்பட 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது. சுரண்டை அருகே பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட வெள்ளாளங்குளம் பூலுடையார்சாஸ்தா கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 க்கும் மேற்பட்ட பைக்குகள் ஏழு ஆட்டுக்குட்டிகள், 100க்கும் மேற்பட்ட குடில்கள் பந்தல் உட்பட 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.அதிர்ஷ்டவசமாக உயர் இழப்புகள் ஏதும் இல்லை. சுரண்டையை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகில் உள்ள வெள்ளாளங்குளம் கிராமத்தில் நூற்றாண்டுகளை கடந்த பூலுடையார் சாஸ்தா கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாசம் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வழக்கம்போல் கடந்த வாரம் கால் நாட்டு விழா நடத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வெள்ளாளங்குளத்தை சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடில்கள் அமைத்து திருவிழாவை கண்டு களித்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் வெகு விமரிசையக நடந்து கொண்டிருந்தது.பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடில்களில் தீ பற்றி எறிந்தது. காற்று அதிகமாக வீசியதால் அனைத்து குடிகள் மீதும் தீ பரவியது.இதனால் பக்தர்கள் பதறி அடித்து ஓடினார்கள்.இளைஞர்கள் மற்றும் ஆண்கள் அருகில் உள்ள தண்ணீரை வைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் நிற்க்கவில்லை. இதைத்தொடர்ந்து பக்தர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.நிலைய அலுவலர் ரமேஷ்,சிறப்பு நிலை அலுவலர் ரவீந்திரன் மற்றும் வீரர்கள் மாடசாமி,நான்முக ராஜன், பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.அதற்குள் 7 ஆட்டுக்குட்டி,பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்,டாட்டா ஏசி வாகனம்,பக்தர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் மைக் செட் பொருட்கள என சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.