மின் இணைப்பு வழங்க ரூ 4 ஆயிரம் லஞ்சம் – கடலாடி மின்வாரிய அதிகாரிகள் கைது
1 min read
Bribe of Rs 4000 to provide electricity connection – Kadladadi Power Board officials arrested
9/8/2–024
கடலாடி சமத்துபுரத்தில் வசித்து வருபவர் ராஜநாதன்(வயது 32). பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவர் தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடலாடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவிப் பொறி யாளர் கணேஷ்குமார் வணிக ஆய்வாளர் முத் துவேல் ஆகியோரை அணுகியுள்ளார். மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் இருவரும் தரவேண்டும் என கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க மம் இல்லாத ராஜநாதன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை கடலாடி மின்வாரிய அலுவல கத்தில் ரசாயண பவுடர் தடவிய ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை ராஜநாதன் கேங்மேன் செந்தூர் பாண்டியிடம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் செந்தூர்பாண்டியை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ப. பணத்தை கைப்பற்றி விசாரித்தர்.
விசாரணையில் மின்வாரிய உதவிப் பொறியாளர் கணேஷ்குமார், வணிக ஆய்வாளர் முத்துவேல் ஆகிய இருவரும் இப்பணத்தை வாங்கச் சொன்னதாக கூறியுள்ளார். இதையடுத்து உதவி பொறியாளர் கணேஷ்குமார்(36), வணிக ஆய்வாளர் முத்துவேல்(37) ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியத் துறையினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.