July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

எல்லைப்புளி பகுதியில் தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன் கைது

1 min read

Son arrested for strangling mother near Kadayam

16.8.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் சரகம் எல்லைப் புளி நடுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மனைவி ஆறுமுகத்தாய்( வயது 65)
இவரது கணவர் கருப்பசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தாய் தனது மகன் மகன் ஐயப்பன் (வயது 51) குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

ஐயப்பன் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் ஐயப்பனுக்கும் அவரது தாய் ஆறுமுகத்தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வாக்குவாதம் முற்றவே ஐயப்பன் தனது தாய் ஆறுமுகத்தாயின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது இதில் மயங்கி விழுந்த ஆறுமுகத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார் ஆறுமுகத்தாய்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன் ஐயப்பனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் ஐயப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினாரர்கள். நீதிபதி அவரை 15 காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன்படி அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்
பாவூர்சத்திரம் பகுதியில் பெற்ற தாயை மகன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.