June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆசியாவிலேயே பணக்கார கிராமம் இந்தியாவில் உள்ளது

1 min read

The richest village in Asia is Madabar in the Indian state of Gujarat

23.8.2024
ஆசியாவிலேயே பணக்கார கிராமம், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள புஜின் நகரில் உள்ள மாதாபர் கிராமம் தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கிராம மக்கள் 32 ஆயிரம் பேர், மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாயை இங்குள்ள வங்கி கிளைகளில் டிபாசிட் செய்துள்ளனர்.
பணம், சொத்து இருந்தால் தான், அக்கம் பக்கத்தினர் என்ன, சொந்த பந்தங்களே மதிப்பர் என்ற நிலை இப்போது உருவாகி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், ஒரு ஊரே மொத்தமும் பணக்காரர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது; அதுவும் நம் நாட்டில் இருக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள புஜின் அருகேயுள்ள மாதாபர் கிராமம் தான் அந்த பெருமைக்குரிய கிராமம்.
இங்கு வசிக்கும் 32 ஆயிரம் பேர், வங்கியில் டிபாசிட் செய்துள்ள தொகை 7 ஆயிரம் கோடி ரூபாய். மொத்தம் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. உள்ளூரை சேர்ந்த 1200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒவ்வொரு தனி நபருக்கும் சராசரியாக டிபாசிட் ரூ.15 லட்சம் இருக்கிறது.
கிராமத்தில் SBI, PNB, HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட 17 வங்கி கிளைகள் உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.