June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் நாய்கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

1 min read

10 people admitted to hospital after being bitten by dogs

25.8.2024
தென்காசி மாவட்டம்,
சுரண்டை நகராட்சி பகுதியில்
நாய் கடித்ததில் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி உள்பட 10 பேர் தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர். இதில் அருணாசலம் (எ) அருணா (வயது 63), பரிசில் பேகம் (வயது 76) நாகப்பா (வயது 43), அரவிந்த் (வயது 26) தீபிகா ஸ்ரீ உள்ளிட்ட 7 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவரிடம் காயமடைந்தவர் களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் படி அறிவுறுத்தினார்.

அப்போது, மாவட்ட திமுக பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ், நிர்வாகிகள் குமார், ஜவகர்அலி, மோகன்ராஜ், வேல்அய்யப்பன், கரிகாலன், சுபகான், ஜாபர், வழக்கறிஞர் அரிகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.