கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தடையை மீறி போராட்டம்
1 min read
Kolkata Woman Doctor Killed: Protest Against Prohibition
27/8/2024
கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகைக்கூண்டு வீசப்பட்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.