June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

காற்று மாசுபாட்டால் இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வு எச்சரிக்கை

1 min read

Indians at risk of losing 3.4 years of life to air pollution – study warns

29.8.2024
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இப்படியே நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வங்கதேசம் அதிக மாசுபாடு கொண்ட நாடாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அந்த அறிக்கை வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசுவின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்ந்தால் ஆயுட்காலம் 1.2 ஆண்டு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் கூட, மேலும் மேலும் காற்று மாசுபடுவதை குறைக்கும் அவசியத்தை நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும்.

தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.