பன்னாட்டு திருக்குறள் மையம் அமைக்க தமிழ்நாடு திறந்தவெளி பல்கலை முயற்சி
1 min read
Tamil Nadu Open University attempts to set up international Thirukkural Centre
31.8.2024
சென்னையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் சார்பில் திருக்குறள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தை மயிலாப்பூர் திருவள்ளுவர் கழக நிர்வாக செயலர் சேயோன் செய்திருந்தார்.
இதில் பன்னாட்டு திருக்குறள் மையம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. எல்லா திருக்குறள் திருவள்ளுவர் அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளுவர் கழக அமைப்புகள் மூலம் பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை வைத்தால் அடுத்த செனட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று விடுவேன் என்றும் அவர் கூறினார். பன்னாட்டு அமைப்பை தொடங்கினால் மத்திய மாநில அரசின் உதவி கிடைக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கடையம் திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம், செயலாளர் கே.எஸ்.கல்யாணிசிவகாமிநாதன் அனுமதியின்பேரில் பாலன் கலந்து கொண்டார்