தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
1 min read
Tamil Nadu Legislative Assembly Evaluation Committee Inspection in Tenkasi District on 3rd
1.9.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024- 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு 03.09.2024 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு (03.09.2024) அன்று குழு தலைவர் / சட்டமன்றஉறுப்பினர் தஎஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலன் கால்நடை பராமரிப்பு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் கூட்டுறவு நெடுஞ்சாலைகள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இந்து சமய அறநிலையங்கள் வனம் இயற்கை வளங்கள் ஆகிய அரசுத்துறைகளின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரம்பு அதன் பயன் அத்திட்ட செயல்முறை வளர்ச்சியை மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுதலைவர் / சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்) தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தங்கம் தென்னரசு(நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் (அலுவல் காரணமாக) கு.செல்வப்பெருந்தகை. தலைவர். பொதுக்கணக்கு குழு (அலுவல் காரணமாக) ஏ.பி.நந்தகுமார், தலைவர். பொதுநிறுவனங்கள் குழு (அலுவல் காரணமாக) அம்பேத்குமார் (வந்தவாசி) பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்) தா.உதயசூரியன் (சங்கராபுரம்) இராம. கரு மாணிக்கம் (திருவாடானை) , காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ( இராமநாதபுரம்) டாக்டர் தி.சதன்திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) மா.சின்னதுரை (கந்தர்வ கோட்டை) எஸ்.சுதர்சனம் (மாதவரம்) கே.ராஜூ (செல்லூர்) அ.செ.விஸ்வநாதன் (ஆம்பூர்) எஸ்.ராமச்சந்திரன் (சேவூர்) மு.பன்னீர் செல்வம் (சீர்காழி) பாலாஜி (திருப்போரூர்) ஓ.எஸ். மணியண்(வேதாரண்யம்) ஈ.ராஜா(சங்கரன்கோவில்) எஸ்.பி.வெங்கடேஷ்வரன்(தர்மபுரி) மற்றும் முதன்மைச் செயலாளர் முனைவர் கீ.சீனிவாசன், கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம், துணைச்செயலாளர் சு.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவினை அளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.