அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்வு- மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
Trade between America and India will increase threefold – M.K.Stalin’s speech
1/9/2024
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
உழைப்பு, திறமை மற்றும் தன்னம்பிக்கையால் தமிழ் வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என உரிமையோடு கேட்கிறேன்.
தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அமெரிக்கா நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்காவில் தங்கிப் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.
இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன.
வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்.
அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியா- அமெரிக்கா உறவு இருநாட்டு உறவல்ல, இது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.