July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுபோதையில் தாக்குதல் – பாடகர் மனோவின் மகன்கள் மீது வழக்குப்பதிவு

1 min read

Drunk Assault – Case filed against singer Mano’s sons

11.9.2024

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கிருபாகரன் (20), அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதுச் சிறுவன் இருவரும் புதன்கிழமை (செப்டம்பர் 11) அதிகாலையில் வளசரவாக்கம் பகுதியிலுள்ள உள்ள காற்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்துவிட்டு பாடகர் மனோ வீட்டின் வழியே சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருந்த பாடகர் மனோவின் மகன்களும் அவர்களின் நண்பர்களும் சேர்ந்து, எதற்காக இங்கு நிற்கின்றீர்கள்?” என கேட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், நால்வரும் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தனர். கிருபாகரனுக்கு பின்னந்தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது. மற்ற மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
இதனையடுத்து, பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாஹீர், ரபிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.