மகாளய பட்சத்தை முன்னிட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் கங்கை தீர்த்தம் விற்பனை
1 min read
Sale of Ganga St. Thirtham at all post offices in honor of Mahalaya Paksha
19.9.2024
மகாலய பட்சத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் கங்கை புனித தீர்த்தம் அடங்கிய பாட்டில் விற்பனை செய்யப் படுகிறது
இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது. முன்னோர் வழிபாடு இந்த நாட்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மகாளயபட்சம்(18.09.2024 முதல் 02.10.2024 வரை) முன்னிட்டு சிறப்பு ஏற்படாக கங்கை புனித தீர்த்தம் அடங்கிய பாட்டில் அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30 ஆகும். கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் அனைத்து தலைமை அஞ்சலகங்கள் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி மற்றும் விளாத்திகுளம், எட்டையாபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய அஞ்சலகங்களில் விற்பனை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகவும். மேலும் 04632 221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது தேவையினை தெரிவிக்கலாம். தங்களது தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் தங்கள் ஊர் அஞ்சலகத்தில் கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும்.
மகாளய பட்சத்தை (18.09.2024 முதல் 02.10.2024 வரை) முன்னிட்டு அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.