சாதி மோதலை தவிர்க்க ராஜாங்கபுரம், வாகைகுளத்தில் நகரும் ரேசன் கடை- அமைச்சர் உறுதி
1 min read
To avoid caste conflict, ration shop will move to Rajangapuram, Vagaikulam- Minister assured
19.9.2024
தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சி, கோவிந்தப்பேரியில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் நியாய விலைக்கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ராஜாங்கபுரத்தை சேர்ந்த சுமார் 217 ரேசன் கார்டு தாரர்கள் ரேசன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இப்பகுதி மக்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் களாகவும், கோவிந்தபேரி மக்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் ரேசன் பொருட்கள் வாங்கும் இடத்தில் சமுதாய மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொருட்கள் வாங்க வரும் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ராஜாங்கபுரத்தில் நகரும் கடை வழங்கினால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
இதே போல், மந்தியூர் ஊராட்சி, மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ரேசன் கடையில் வாகைகுளம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் குளத்தின் கரை மற்றும் வாய்க்கால் வழியாக சென்று பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி விவசாய தொழில் செய்பவர்கள்.இவர்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே வாகைகுளத்தில் ஒரு நகரும் கடை அமைத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சீவநல்லூர் கோ. சாமித்துரை. முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், குருக்கள்பட்டி வனராஜ், செல்வகுமார், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
One attachment
• Scanned by Gmail