குருவன்கோட்டை சுகாதார நிலையத்தில் கம்ப்யூட்டர் திருடிய 2 பேர் கைது
1 min read
2 people arrested for stealing computer from Guruvankot health center
20.9.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவன்கோட்டை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 16.09.24 அன்று மர்ம நபர்கள் அங்கிருந்து கம்ப்யூட்டரை திருடி சென்றனர்.
இது குறித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி களை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் போலீசாருக்கு உத்தர் விட்டார்.
இதன் அடிப்படையில் ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மாடசாமி, தலைமை காவலர் பாலகன், காவலர் கண்ணன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்ட குருவன்கோட்டை ஜவகர் தெருவை சேர்ந்த சீனி மகன் முருகன்(49), குருவன்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோவில் பிள்ளை மகன் தாமஸ் (47) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது..