June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர்: லாரி கவிழ்ந்து சாலையில் நின்றவர் பலி

1 min read

Kadayanallur: A man standing on the road was killed when a truck overturned

20.9.2024
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்ற தொழிலாளி உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது. 55), கூலித்தொழிலாளி. இவர் வழக்கம் போல் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, மதுரையில் இருந்து செங்கோட்டை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. குமந்தாபுரம் பகுதி
யில் வந்தபோது திடீரென்று சாலையின் குறுக்கே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் திருப்பி உள்ளார்.

அப்போது டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த கருப்பசாமி யின் மீது கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செங்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் சீனி வாசகம், அதில் இருந்த உரி மையாளர் வெங்கடேஷ் ஆகி யோர் காயம் அடைந்தனர். லாரியில் இருந்த வெங்காயம் மற்றும் காய்கறிகள் சாலையோரத்தில் சிதறிக்கி டந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கருப்பசாமி லாரியின் அடியில் சிக்கியதால் அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, லாரி நேராக நிறுத்தி வைக்கப் பட்டது. பின்னர் கருப்பசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.