தென்காசியில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் தீயணைப்புத்துறை அணி வெற்றி
1 min read
Fire Department Team Wins Kabaddi Tournament for Chief Minister’s Cup in Tenkasi
26.9.2024
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான தென்காசி மாவட்ட கபடி போட்டியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து விளையாடி முதல் பரிசை பெற்றுள்ளது. இரண்டாவது இடம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் அணியும், மூன்றாவது பரிசை தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியினரும், பெற்றுள்ளனர். மாவட்ட கபடி கழக செயலாளர் நல்லாசிரியர் அருள் இளங்கோவன் மற்றும் கன்வினர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் கணேசன் நடுவர் குழு சேர்மன் ஆசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மற்றும் நடுவர்கள் சின்னச்சாமி மாரியப்பன் மாணிக்கம் சுடலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் தென்காசி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களை தென்காசி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் பானுப்பிரியா, உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் தென்காசி நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் ஆகியோர் பாராட்டினார்கள். முடிவில் தென்காசி தீயணைப்பு துறை நிலைய சிறப்பு அலுவலர் கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.