June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

471 நாட்களுக்குப்பின் செந்தில்பாலாஜி வெளியே வந்தார்-போக்குவரத்து ஸ்தம்பித்தது

1 min read

Senthilbalaji came out after 471 days – traffic came to a standstill

26.9.2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.
செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக புழல் சிறை அருகே மாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். தற்போது வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
செந்தில் பாலாஜியை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் மாதவரம்-ஆந்திரா சாலையில் போக்குவரத்து முடங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.