June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூரில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி

1 min read

Construction of new passenger shelter at Vaithilingapuram

28.9.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி, வைத்திலிங்கபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.இந்நிலையில் நேற்று வைத்திலிங்கபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன்சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். துணை சேர்மன் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) மகேஸ்வரி, துணைத்தலைவர் செல்வமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் இராம. உதயசூரியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.