தென்காசியில் தேசிய புகையிலை தொடர்பான விழிப்புணர்வுபேரணி
1 min read
National Tobacco Awareness Rally in Tenkasi
28.9.2024
தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பாக புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 20 விழிப்புணர்வு வகைகளில் ஒன்றான பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாளகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்ட இந்தப் பேரணி புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வட்டார அளவில் உள்ள சுகாதார பணியாளர்கள், மாவட்ட சுகாதார அலுவலகப் பணியாளார்கள் ஆகியோர் புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 20 விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் மூலம் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் மூலம் தேசிய புகையிலை தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் முழுவதும் வட்டாரங்கள் வாரியாக புகையிலை இல்லா இளைஞர்
பிரச்சாரம் 20 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24.09.2024 முதல் 30.09.2024 வரை வடகரை கீழ்பிடாகை வட்டாரத்திலும், 01.10.2024 முதல் 05.10.2024 வரை இலத்தூர் வட்டாரத்திலும், 07.10.2024 முதல் 11.10.2024 வரை சொக்கம்பட்டி வட்டாரத்திலும், 14.10.2024 முதல் 18.10.2024 வரை வாசுதேவநல்லூர் வட்டாரத்திலும், 19:10.2024 முதல் 24.10.2024 வரை கரிவலம்வந்தநல்லூர் வட்டாரத்திலும், 25.10.2024 முதல் 30.10.2024 வரை குருவிகுளம் வட்டாரத்திலும், 31.10.2024 முதல் 04112024 வரை சேர்ந்தமரம் வட்டாரத்திலும், 05,112024 முதல் 10.112024 வரை பாவூர்சத்திரம் வட்டாரத்திலும், 14112024 முதல் 18.11.2024 வரை கடையம் வட்டாரத்திலும், 9.11.2024 முதல் 23.11.2024 வரை நெட்டூர் ஆகிய வட்டாரத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.
இவ்வாறு அவர்தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வி.கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே.மோதி, மாவட்ட சுகாதார அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள் மற்றும் அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டாக்டர் எம்.புதிய பாஸ்கர் கல்லூரி பொறுப்பு முதல்வர் மாரியப்பன்
முதலாம் ஆண்டு துறை தலைவர் சுடலைமுத்து, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன் செந்தில்குமார், சுபேதார் கே எஸ் என் ராவ் , நாட்டு நல பணி திட்ட
அலுவலர் கருப்பசாமி, இதில் 80 தேசிய மாணவர் படை மாணவர்களும்,150 என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் தென்காசி வட்டார சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.