கடையம் திருவள்ளுவர் கழக கூட்டம்
1 min read
Kadayam Thiruvalluvar meeting
30.9.2024
கடையம் திருவள்ளுவர் மாதாந்திர சிறப்பு கூட்டம் கடையம் கே.எஸ்.எஸ். சிற்றரங்கில் நேற்று நடந்தது. தலைவர் தமிழ்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமக்கல்யாணி கல்லூரி பேராசிரியா தெய்வத்தமிழ் சுடர் இரா.வே.சிவஹரிபிரம்மசங்கர் மெய்யும், பொய்யும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக சரோஜாநாதன் இறைவணக்கம் பாடினார். த.லாரன்ஸ் குறள்சிந்தனை தந்தார். சேவாலயா சங்கிலிபூதத்தான் வரவேற்றார். க.கோபால் அறிமுகஉரையாற்றினார். ஓய்வூதிய சங்க செயலாளர் அம்பலவாணன் சிறப்பு சொற்பொழிவாளர் சிவஹரிபிரம்மசங்கருக்கு பொன்னாடை போர்த்தினார். பெ.சின்னசாமி நன்றி கூறினார்.