குத்துக்கல்வலசையில் பனை விதைகள் நடும் விழா- ஆட்சித்தலைவர் பங்கேற்பு
1 min read
Palm seed planting ceremony at Kuthukalwalasai – Governor’s participation
3/10/2024
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி ஜெக வீரராமபேரி குளத்தில் தமிழ்நாடு அரசின் ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தின் சார்பில் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் பனை விதைகள் நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் ஒரு கோடி பனை விதைகள் நடும் இயக்கத்தின் கீழ், நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி, வனத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, நீர்வளத்துறை, நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து குத்துக்கல்வலசை ஊராட்சி ஜெக வீரராமபேரி குளத்தில் பனை விதைகளை நட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள 10 வட்டாரங்கள், 6 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 221 ஊராட்சிகள் உள்ளடக்கிய 546 இடங்களில் 2.10.000 பனை விதைகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ. தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் செ. சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.