கோவிந்தப்பேரி – தர்மபுரம்மடம் கிராம உதவியாளர்களை நியமிக்க கோரிக்கை
1 min read
Govindapperi – Dharmapurammadam Request for appointment of Village Assistants
5/10/2024
தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவருமான
டி.கே.பாண்டியன் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தபேரி, தர்மபுரம்மடம் இரண்டு கிராமங்களுக்கும் ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே செயல்பட்டு வருகிறார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரிக்கு உதவியாக செயல்பட கிராம உதவியாளர்பணியிடம் கடந்த 4 மாதங்களாக காலியாக உள்ளது. கோவிந்தப்பேரி, தர்மபுரபடம் ஆகிய இரண்டு ஊராட்சியிலும் சுமார் 8,000 க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே செயல்பட்டு வருகிறார். இதுவரை அந்த இரண்டு கிராமங்களிலும் தலா இரண்டு நபர்கள் மீதும் நான்கு கிராம உதவியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
ஆனால் கடந்த 4 மாதங்களாக கிராம உதவியாளர் ஒருவர் கூட இல்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமன்றி கோவிந்தப்பேரி தர்மபுரம்மடம் கிராம மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்கள் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாறுதல் , விவசாயம் சார்ந்த சான்றிதழ்கள் பெறுவதற்கும் கிராம நிர்வாக அலுவலரை அணுகும் நிலையில் கிராம உதவியாளர் இல்லாமல் இரண்டு கிராம மக்களும் உரிய சான்றிதழ்களை உரிய நேரத்தில் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே 2 கிராமங்களுக்கு தலா ஒரு கிராம உதவியாளரை மட்டுமாவது நியமனம் செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் விரைவில் இரண்டு கிராமங்களுக்கும் கிராம உதவியாளரை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், முதல் கட்டமாக ஒரு கிராம உதவியாளரை உடனடியாக நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.