செங்கோட்டையில் கணவனை கொலை செய்த மனைவி கைது
1 min read
Wife arrested for beating her husband to death in Sengotai
6/10/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம்
செங்கோட்டை மேலபுதூர் பகுதியை சேர்ந்த வீரபாலன் என்பவரது மகன் சின்னத்துரை (வயது 45). கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சேது பிள்ளை என்பவரது மகள் மாயா (வயது 33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை பார்த்து வந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் பிரானூர் பார்டர் , இராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மர அறுவை ஆலைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மாயா தனது சொந்த ஊரான மேலபுதூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி உளளார்.சின்னத்துரை ராமேஸ்வரத்தில் இருந்து அவ்வப்போது மேலப்புதூருக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் வீட்டிற்கு வெளியே கிடந்த கட்டிலில் சின்னத்துரை தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில்
6 மணிக்கு தூங்கி எழுந்து வாசலில் தண்ணீரால் தெளித்து கோலம் போட வந்த மாயா தனது கணவர் கட் டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை சுண்டு கூச்சல் போட்டு யாரோ மர்ம நபர்கள் சின்னத்துரையை கொன்று விட்டதாக கூறியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இது பற்றி விசாரணை நடத்திய போது சின்னத்துரையின் மனைவி மாயா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீசார் மாயாவிடம் நடத்திய விசாரணையில் மாயா தனது கணவர் சின்னத்துரை அடிக்கடி தன்னிடம் தகராறு செய்வது வந்ததால் ஆத்திரத்தில் தனது கணவரை நேற்று இரவு தானும் தனது அண்ணன் மனு
(வயது 35) என்பவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் சின்னத்துரையின் மனைவி மாயா மற்றும் அவரது மைத்துனர் மனு ஆகியோரை கைது செய்தனர் . மேலும் போலீசார் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.